ஹெரோயின் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட நபர் கைது!

1595419948 hrroin 2 1
1595419948 hrroin 2 1

வட மாகாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்ட ஒருவர் மல்லாகம்-உடுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுவரி திணைக்கள சாவகச்சேரி நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, 4 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பிரதி மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் கொண்டுச் சென்று விநியோகித்து வந்துள்ள விடயமானது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.