புகையிலை, மதுபானம் காரணமாக இலங்கையில் தினமும் சுமார் 85 பேர் உயிரிழப்பு!

wine
wine

”கால் போத்தல்” மதுபான நடைமுறை ஊடாகவே இலங்கை மக்கள் அதிக அளவில் மது அருந்துவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர், கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புகையிலை மற்றும் மதுபானம் காரணமாக இலங்கையில் தினமும் சுமார் 85 பேர் உயிரிழப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஒவ்வொரு நாளும் சுமார் 85 பேர் உயிரிழக்கின்றனர்.

சிகரெட்டுகளின் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டால், புகைபிடிப்பதை 80% முதல் 90% வரை நிறுத்த முடியும்.

”கால் போத்தல்” நடைமுறையினை ஒழிப்பதற்கான சட்ட மசோதாக்களை கொண்டுவருவதற்கான விவாதங்கள் இடம்பெற்று வருகிறது.

2019ஆம் ஆண்டில் மாத்திரம் 300 மில்லியன் போத்தல்கள் சேர்க்கப்பட்டன. கண்ணாடி போத்தல்களை அப்படிச் சேர்க்கும்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு, டெங்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உருவாகும்.

சமீபத்திய வருடங்களில் மாத்திரம் 160 – 190 மில்லியன் வெற்று பியர் கேன்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

புகையிலையுடன் வெற்றிலையை உட்கொள்வதால் ஏற்படும் வாய்வழி புற்றுநோயால் இலங்கையில் தினமும் மூன்று பேர் உயிரிழக்கின்றனரென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.