ஹந்தான வனப்பகுதி ஒன்று அழிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுசூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது குறித்த சகல அறிக்கைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தின் எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரினால் இவ்வாறான சம்பவம் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.