கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மோதல்! – வவுனியாவில் சம்பவம்!

1599012494 cricket 2
1599012494 cricket 2

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காந்திநகர் பகுதியில் இரு கழகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் காந்திநகர் விளையாட்டு மைதானத்தில் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.

இரு கழகங்களுக்கிடையே மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்ற சமயத்தில் குறித்த இரு கழக அணியினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகளப்பாக மாறியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் சிகிச்சைக்களுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.