கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 4 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 883ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை மூவாயிரத்து 92 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இன்னும் 197 பேர் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகி 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.