பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை!

fg 1 1
fg 1 1

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் முதற்கட்ட அறிக்கை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிரதமர் செயலகத்தில் வைத்து சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் இந்த குழுவில் இதுவரை சுமார் 6952 பேர் வரை சாட்சியம் வழங்கியுள்ளனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயவே இந்த குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.