கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3098 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 3097 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2883 ஆக காணப்படுகின்றது.
அதேபோல், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 203 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.