நாடாளுமன்றில் நுழைவதற்கு பஸிலுக்கு எந்த தடையும் இல்லை: எம்.பி விமல் வீரவன்ச!

1541743406 wimal 2
1541743406 wimal 2

பசில் ராஜபக்ஷவுக்கு இப்போது நாடாளுமன்றில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டால், அவர் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியும் என்றும் அவர் கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை முறையாக ரத்து செய்து இலங்கையின் ஜனாதிபதியானார்.

அதேபோல் பசில் ராஜபக்ஷ அதே முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக முடியும் என்றும் வீரவன்ச கூறியுள்ளார்.