யாழ்ப்பாணத்தில் ஹொரோயின் நுகர்ந்து கொண்டிருந்த 5 இளைஞர்கள் கைது!

4

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸார் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியில் உள்ள ஆலய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இளைஞர்கள் கூடி நிற்பதாக கோப்பாய்  போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் 5 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்படவர்களிடம் இருந்து 210 மில்லிக் கிராம் கொரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.