கண்டியில் கடந்த நாட்களில் பல்லேகலையை அண்மித்த பிரதேசங்களில் சிறியளவிலான நில அதிர்வாக பதிவாகியுள்ளது.
விக்டோரிய நீர்தேக்கத்தை அண்மித்த பகுதி மற்றும் அந்த நிலப்பரப்பை அண்மித்த ஆழ் நில தட்டுக்களில் ஏற்பட்ட வெடிப்புகள் அல்லது சரிவுகள் இந்த நில அதிர்வுக்கு காரணமாக அமைந்துள்ளதாக ஆரம்பகட்ட எதிர்வுகூறல்கள் இருப்பதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இவை தவிர இந்த நில அதிர்வானது மஹகந்தராவ கண்காணிப்பு மத்திய நிலையத்திலும் கம்பஹா கண்காணிப்பு மத்திய நிலையத்திலும் மிகச் சிறியளவாக பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.