வவுனியா மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி இன்று(05) வவுனியா நகரசபை உள்ளக அரங்கில் வவுனியா மாவட்ட செயலாளர் சமன் பந்துலசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட விளையாட்டு அதிகாரி பர்சூர் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டி நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, உதவி மாவட்ட செயலாளர் செல்வி சபர்ஜா, விளையாட்டுத்துறை அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பூப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.