மட்டக்களப்பு – படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் யானைகள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.
கிராமத்திற்குள் நுழைந்துள்ள 3 யானைகள் வீடுகளை சேதமாகியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுள்ளனர்.
பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து மூன்று யானைகளையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளதாக குறிப்படப்படுகிறது.
அத்துடன் வேலிகள், பயிர்செய்கைகள் மற்றும் நெல்குற்றும் ஆலை ஒன்றையும் யானைகள் முற்றாக சேதமாக்கியுள்ளதாக வேத்துச்சேனை கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.