மதில் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி

Untitled 1

நவகமுவ-கொதலாவல பாடசாலை மாவத்தையில் பலத்த காற்றினால் வீடொன்றின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இளம் பெண்ணொருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

மேலும், இச் சம்பவத்தில் பெண்ணின் தாயும் சகோதரரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் 22 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை, அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு. காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.30 வரையில் இந்த எச்சரிக்கை நீடிக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை இன்று நிறைவடைய கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேலும் சில பகுதிகளில் இன்று மதியம் வெப்பமான வானிலை நிலவுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.