எருமை மாடுகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற சாரதி மற்றும் உதவியாளர் கைது.

25

வவுனியா நெளுங்குளம் பகுதியில் 14 எருமை மாடுகளை ஏற்றிவந்த லொறி ஒன்றினை பொலிசார்
பிடித்துள்ளதுடன் சம்பவம் தொடர்பாக லொறியின் சாரதி மற்றும் நடத்துனரை கைது செய்துள்ளனர்.

மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை ஏற்றி வருவதாக வவுனியா மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த லொறியினை மடக்கி பிடித்துள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியினை பொலிசார் கையகப்படுத்தியதுடன் லொறியின் சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் வவுனியா புளிதறித்தபுளியங்குளம் பகுதியினை சேர்ந்தவர்களாவார்கள்.

கைது செய்யப்பட்ட நபர்களை வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.