ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவினை ஆதரித்து ஒட்டமாவடி பிரதான வீதியின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் நேற்றிரவு (Oct.25) கட்சி காரியாலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கைத்தொழில் வர்த்தக நீண்ட நாள் இடம்பெயர்வு கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.