ஐ.தே.க. தலைவிதியை மாற்ற சஜித்தால் மாத்திரமே முடியும்!

e35ab480 sajith pemadasa 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1
e35ab480 sajith pemadasa 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 1

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவிதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும்.”என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டுவரப்பட்டுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். அதற்குத்  தலைமை தாங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தயாராகவுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்