புத்தளத்தில் 12 கிலோகிராம் கேரளா கஞ்சா மீட்பு

06

புத்தளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கேரளா கஞ்சா புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது புத்தளம் பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை மதுரங்குளி கடையாமோட்டை பகுதியில் வீடொன்றை சோதனை செய்த வேளை வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டி புதைத்து  வைக்கப்பட்டிருந்த சுமார் 12 கிலோகிராம் கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. 

இதன்போது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் புத்தளம் பொலிசார் மேகொண்டு வருகின்றனர்.