ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று சபையில் அறிவித்தார்.
சமல் ராஜபக்ச, தினேஷ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரண, சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, விதுர விக்கிரமநாயக்க, ஜோன் செனவிரட்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, விஜித ஹேரத், ரிஷாத் பதியுதீன், தலதா அத்துகோரள, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்டோர் உயர் பதவிகள் குழுவுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று சபாநாயகர் அறிவித்தார்.