கொழும்பு இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று சரிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர தொடருந்து சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது புகையிரத பாதையில் வீழ்ந்துள்ள குறித்த மரத்தை அகற்றும் பணிகளில் புகையிரத திணைக்கள ஊழியர்களும் அதிகாரிகளும் செயற்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .