ஜனாதிபதி நாடு திரும்பினார்

sirisena 2
sirisena 2

ஜப்பானில் நடைபெறும் அரச நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நேற்றிரவு (Oct.27) நாடு திரும்பியுள்ளார்.

ஜப்பானில் நடைபெறும் அரச நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ஜப்பான் நாடு சென்றிருந்தார்.

ஜனாதிபதியுடன் 21 பேர் கொண்ட தூதுக் குழுவொன்றும் சென்றிருந்தது. இதில், அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. நேற்றிரவு 11.35 மணிக்கு சிங்கப்புர் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இக்குழு தரையிறங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.