ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் தொடர்பில் வெளியானது தகவல்

mmm
mmm

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 1 ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக அந்த கட்சியின் சட்டச் செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்த சஜித் பிரேமதாஸ கட்சியிலிருந்து விலகியதன் காரணமாக அந்தப் பதவிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் புதிய பிரதி தலைவர் செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சட்டச் செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.