பேருந்து முன்னுரிமை பாதைச்சட்டத்தை செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறிப்பதற்காக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.