கொரோனா வைரஸில் இருந்து மேலும் 09 பேர் குணமடைவு!

images 1 1
images 1 1

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 09 பேர் குணமடைந்து இன்று(10) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 955 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 147 ஆக பதிவாகியுள்ளது.

அவர்களில் 2 ஆயிரத்து 955 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 180 பேர் தொடர்ந்தம் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் 63 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளதோடு, இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.