சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து வாகனங்களுடன் ஐவர் கைது

01 6 2
01 6 2

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொண்டுகள்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேக நபர்களும், நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் இயந்திரம் என்பன வியாழக்கிழமை மாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

01 8 3
01 8 3

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பொண்டுகள்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகலையடுத்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன்;, நான்கு உழவு இயந்திரங்கள் மற்றும் மணல் அகழும் இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

01 9 2
01 9 2

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் சட்டவிரோத மரம் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அதனை தடுப்பதற்கு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு ஒன்று செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

01 7 1
01 7 1