கொவிட் 19 நோய்த்தாக்கத்திலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

EEE
EEE

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 14பேர் அந்த நோய் தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 174 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் இதுவரை 3,155 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது