தியவன்னா ஓயாவின் நீர் மட்டம் அதிகரித்து வருவதால் இலங்கை நாடாளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிக மழை காரணமாக நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளம் அதிகரித்து வருகிறது.
தொடர்ந்தும் அடைமழை பெய்யுமிடத்து ஏற்படும் பேரிடரை தடுப்பதற்காக படையினர் தயார் நிலையில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.