தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 1923 முறைப்பாடுகள்!

election commision
election commision

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு 20 நாட்களுக்குள் 1923 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 8 ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிவரையான 20 நாட்களுக்குள் இந்த 1923 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

மாவட்ட தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1307 முறைபாடுகளும், தேசிய தேர்தல் முறைபாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 616 முறைப்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேர்தல் சட்டதிட்டங்களை மீறியதாக 1826 முறைப்பாடுகளும் , தேர்தல் தொடர்பான ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் 80 முறைப்பாடுகளும், தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 17 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுயாதீன தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.