ஐ.தே.க யின் மற்றுமொரு தீர்மானம் மிக்க செயற்குழு கூட்டம் நாளை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 18
625.500.560.350.160.300.053.800.900.160.90 18

ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு தீர்மானம்மிக்க செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவம் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை விவகாரங்களுக்கு தீர்வு காண்பதற்காக இதற்கு முன்னதாக பல தடவைகள் செயற்குழு கூடியிருந்த போதிலும், எந்தவிதமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படாமல், இழுபறி நிலையில் கூட்டம் நிறைவடைந்திருந்தது.

இந்த நிலையில், நாளை பிற்பகல் 3 மணியளவில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், மற்றுமொரு விசேட செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபவேர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர் செயற்குழுவில் தெரிவு செய்வதற்கு, பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

எனினும், தலைமைத்துவத்திற்கு பொருத்தமானவர் இதுவரையில் பரிந்துரைக்கப்படாதமை காரணமாக, நாளைய தினம் இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டம் மிகவும் முக்கியத்துவமிக்கதாக இருக்கும் என கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தற்போது வெற்றிடமாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் நாளைய தினம் இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.