வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை

aa 1
aa 1

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் நாளைய தினம் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .

அத்துடன் வடமேல் மாகாணத்திலும் மழையுடனான வானிலை நிலவுவதோடு ஊவா மாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டகளப்பு மாவட்டங்களிலும் நாளை இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது .

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .