மருத்துவ தெய்வங்களுக்கு விடைகொடுக்கும் கிளிநொச்சி மக்கள்

IMG 59aa56f6b0876561b4f0402a51e8f008 V 1
IMG 59aa56f6b0876561b4f0402a51e8f008 V 1

கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்களாக பணியாற்றிய இருவரும் கிளி மக்களின் அன்பும், மதிப்பும் கொண்டு மக்களின் மனங்களில் இடம்பிடித்த இவர்கள், மக்களின் உணர்வுகளுடன் கலந்து மனிதநேயம் கொண்டு இரக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, அமைதி, அன்பு போன்ற தெய்வீக குணங்கள் கொண்ட இரண்டு மருத்துவ நிபுணர்களும் கிளி மாவட்டத்தில் இருந்து கடமையின் நிமித்தம் இடமாற்றமாக எம்மிடம் இருந்து விடை பெறுகிறார்கள்.

இவர்களின் தெய்வீகம்,புகழ்,மதிப்பு என்றென்றும் நிலைபெற எம் ஆத்மிக ரீதியான வாழ்த்துகளோடு Dr.ஜேவோன் யுதிஸ்வரன்,Dr. ஜெயலக்சுமி இவர்கள் மீண்டும் எம் மாவட்டதிற்க்கு பணியாற்ற வரவேண்டும். எம் மக்களிற்க்கு அவர்களின் சேவை மீண்டும் கிடைக்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்பதோடு,இவ்வாறான மனித தெய்வங்கள் எங்கிருந்தாலும் நல்வாழ்வு வாழ இறைவனை வேண்டுவதோடு,இவர்கள் போன்றோரின் நல்ல சேவையும் நற்பண்பும் எம் மண்ணில்,எம்மக்களின் உணர்வுகளோடு என்றென்றும் கலந்துநிற்கும்.

கிளிநொச்சி மாவட்ட,
மக்கள்