கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் பிரதிவாதிகளான பிள்ளையான் உள்ளிட்ட 5 சந்தேக நபர்களையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸதீன் முன்னிலையில் இன்று (Oct.28) ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தொடர்பான விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார்