சூதாட்டத்தில் ஈடுபட்ட லக்கல பிரதேச சபையின் தலைவர் கைது!

pppppp
pppppp

சூதாட்ட குற்றச்சாட்டுக்காக லக்கல பிரதேச சபையின் தலைவர் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தக் குழுவினர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களிடமிருந்து 24 ஆயிரம் ரூபாவும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் சந்தேக நபர்களிடமிருந்து 221 மில்லிகிராம் ஹெராயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.