குற்றங்களிலிருந்து முழுமையாக ஹெரோயினுடன் கைதானவர் விடுதலை!

LAW 1
LAW 1

198 கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதிவாதி ஒருவரை முழுமையாக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கழு ஆராச்சி இன்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

சோதனைகளில் ஈடுபடும் அதிகாரிகளின் கவனக்குறைவினால் இவர்களை போன்றவர்கள் விடுதலை பெறுவது கவலைக்குரிய விடயம் என மேல்நீதிமன்ற நீதிபதி சுட்டிக்காட்டினார்.

குறித்த சந்தேக நபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குரிய சாட்சியங்கள் முறையாக முன்வைக்கப்படாமையினால் குற்றம் நிரூபிக்கப்படாமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.