நாட்டிக் கிழக்கு கடற்பரப்பில் அண்மையில் என்னை கசிவு காரணமாக தீ விபத்துக்குள்ளான எம்டி நியூ டயமண்ட் எண்ணெய்க் கப்பல் தொடர்பில் 340 மில்லியன் ரூபா நட்டம் கோரப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரினால் இந்த நட்டஈட்டு கோரிக்கைக்கான அறிக்கை MT எம்டி நியூ டயமண்ட் கப்பலின் உரிமையாளர்களது வழங்கறிஞ்சர் குழாமிடம் கையளிக்கப்பட்டுள்ளது..
குறித்த கப்பலில் ஏற்ப்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், அது சார்ந்ததாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக ஏற்பட்ட செலவீனங்களை அடிப்படையாக கொண்டு இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு பெருமளவு தொகையான மைசகு மற்றும் டீசல் ஆகியவற்றை ஏற்றிவந்தகுறித்த கப்பல் இலங்கையின் கிழக்கு கடற்ப்பரப்பில் தீப்பரவலுக்கு உள்ளானது.
இந்த நிலையில், இலங்கை கடற்படை உள்ளிட்ட 15 திணைக்களங்கள் ஒன்றினைந்து பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் கப்பலின் தீப்பரவலை கட்டுப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.