சியம்பலாண்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கி வனவள ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சியம்பலாண்டுவ வனப்பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையிலேயே இவர் இத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.