அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்குவதற்காக இன்றையதினம், முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அதில் முன்னிலையாகினார்.
எனினும் அவரது சாட்சிப் பதிவை மேற்கொள்ள போதிய கால அவகாசம் இருக்கவில்லை.
இதனால் அவரை எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் இந்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவில் முன்னிலையானதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் இந்த தகவலை வழங்கினார்.