போத்தலை உடைத்து உட்கொண்ட நபரினால் வவுனியாவில் பரபரப்பு!!

IMG 2827
IMG 2827

போத்தலை உடைத்து அதை உணவாக உட்கொண்ட நபர் ஒருவரை பொதுமக்கள் மீட்ட சம்பவம் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் அமர்ந்திருந்த நபர் ஒருவர்,கண்ணாடி போத்தலை உடைத்து அதனை வாயில்போட்டு உணவாக உட்கொண்டுள்ளார். இதனால் காயமடைந்து வாயிலிருந்து குருதி வெளியேறிய நிலையிலும் குறித்த நபர் உட்கொள்வதை நிறுத்தவில்லை.

IMG 2826
IMG 2826

இதனை அவதானித்த சிலர் வைத்தியசாலையில் கடமையில் இருந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவத்தை அவதானித்த பொலிசார் குறித்த நபரை மீட்டு அவ்விடத்திலிருந்து அகற்றி வைத்தனர்.