20 வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும் போது அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பினை வெளியிடும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான 13 ஆம் திருத்தத்தினை நீக்குவதற்கும் தமது தரப்பு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.