வழமைக்கு திரும்பிய நாவலபிடிய-கொத்மலை வீதியின் போக்குவரத்து

DSC04717 1
DSC04717 1

நாவலப்பிட்டி-கெட்டபுலா ஊடாக கொத்மலை செல்லும் பிரதான வீதியின் திஸ்பனை பகுதியில் இன்று (20) அதிகாலை மரமொன்று முறிந்து வீழ்ந்ததன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பிரதேச மக்கள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இவ்வீதியில் சுமார் மூன்று மணித்தியாலயத்திற்கு மேல், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் வீதியில் உள்ள மின் இணைப்புகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக குறித்த பகுதிக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.