ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியன வலயத்தில் உள்ள பாடசாலைகளும் நாளை மூடப்படவுள்ளன.
இதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு இதற்கான ஆலோசணை வழங்கப்பட்டுள்ளதாக, தென் மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.