மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சேவை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 31
625.500.560.350.160.300.053.800.900.160.90 31

மின் பாவனையாளர்களின் முறைப்பாடுகளை தீர்ப்பதற்காக மாகாண மட்டத்தில் நடமாடும் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சாரத் துறையின் ஒழுங்குறுத்துகை நிறுவனமான இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மற்றும் லங்கா தனியார் மின்சார நிறுவனம் பிரைவேட் லிமிடெட் (லெகோ) ஆகியவற்றுடன் இணைந்து இச்செயற்பாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்மட்டமாக தென்மாகாணத்தில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நடமாடும் சேவையின் அடுத்த மக்கள் சந்திப்பு வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலனறுவை ஆகிய மாவட்டங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்கள் பொது மக்கள் இருக்கும் இடத்திற்கே சென்று சேவை செய்ய வேண்டும் என்ற ஜனாதிபதி மற்றும் பிரதமரின் எண்ணக்கருவிற்கமைய இந்த நடமாடும் சேவை அனைத்து மாகாணங்களிலும் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.