தேசிய வைத்தியசாலையாக கண்டி போதனா வைத்தியசாலை தரமுயர்வு

kandy hospital
kandy hospital

சகல வைத்திய வசதிகளும் கொண்ட இந்நாட்டின் இரண்டாவது தேசிய வைத்தியசாலையாக கண்டி போதனா வைத்தியசாலை இன்று (Oct.30) தரமுயர்த்தப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறும் விசேட நிகழ்வின் மூலம் கண்டி போதனா வைத்தியசாலை கண்டி தேசிய வைத்தியசாலையாக தரமுயத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர், சுகாதார அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.