அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவு முதல் வாசிப்புக்காக இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி 20 ஆவது திருத்த வரைவை இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்துக்காகவும், நிறைவேற்றத்துக்காகவும் சபையில் சமர்ப்பிப்பார்.
அதன்பின்னர் எந்தவொரு குடிமகனுக்கும் திருத்த வரைவுக்கு எதிராக ஏழு நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியும் என்று நாடாளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி எந்தவொரு தரப்பினரோ 20 ஆவது திருத்தத் வரைவை சம்பந்தப்பட்ட காலத்துக்குள் சவால் செய்தால், மனுவைத் தாக்கல் செய்த நாளிலிருந்து 21 நாட்களுக்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்க வேண்டும்.
சட்டமா அதிபரின் கூற்றுப்படி, இந்தத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகின்றது.