புகையிரதத்துடன் மோதுண்ட 4 மாடுகள் பலி

train accident
train accident

தலைமன்னாரில் இருந்து இன்று (Oct.30) காலை 7.10 மணியளவில் மதவாச்சியூடாக கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் 4 மாடுகள் மோதி உயிரிழந்துள்ளன.

குறித்த சம்பவம் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி இசைமாளத்தாழ்வு பகுதியில் இன்று (Oct.30) காலை 8.25 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

விபத்தை தொடர்ந்து புகையிரதம் மீண்டும் பயணிகளுடன் மதவாச்சி நோக்கி சென்றது.