நாட்டில் தொடரும் அடை மழை மற்றும் பலத்த காற்று விசியதன் காரணமாக கினிகத்தேனை, கெனில்வத்த தோட்ட பகுதியில் 14 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஒரு குடியிருப்பு மீது பலா மரம் ஒன்று விழுந்ததில் 14 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 14 குடியிருப்புகளில் வசித்து வந்த 74 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, கினிகத்தேனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் நேற்று 21 மாலை 5.30 மணி அளவில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருவதோடு, குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பபான கிராம உத்தியோகத்தர் ஊடாக அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கும் குறித்த சம்பவம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்குள்ளாகி குடியிருப்புகளை சீர் செய்வதற்காக இராணுவ தளபதி சவேந்ர சில்வாவின் பணிப்புரைக்கு அமைய லக்ஷபான இராணுவ முகாமின் உத்தியோகத்தர் தலைமையில் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சீர் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.