பெண் தொழிலாளி ஒருவரின் காதில் இருந்து மீட்கப்பட்ட குளவிகள்!

1 1552387214 1
1 1552387214 1

பொகவந்தலாவ சீனாகலை பூசாரி தோட்ட தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் தொழிலாளி ஒருவர் உட்பட இருவர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்கான பெண் தொழிலாளி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் காதில் இருந்து பல குளவிகள் மீட்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தோட்ட பகுதியில் உள்ள தேயிலை மலையில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து குறித்த தொழிலாளியையும் வெளிகள உத்தியோகத்தரையும் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.