பாராளுமன்ற கலாசாரத்திற்கு பொருத்தமற்ற ஆடை அணிந்து வந்த அதாவுல்லா!

5 sw
5 sw

தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து வெளியேறியுள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட அதாவுல்லா அணிந்திருந்த உடை, எந்த வகையிலும் பாராளுமன்ற கலாசாரத்திற்குப் பொருத்தமானதல்ல என்றும், இது நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதாக சக உறுப்பினர்கள் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தனர்.

இதனை தொடர்ந்து ஏ எல் எம் அதாவுல்லா நாடாளுமன்றிலிருந்து தாம் வெளியேறுவதாக அறிவித்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.