கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்…!

8ccd5be0 045c 4083 974a 37593a556c03 13884 0000074212610269
8ccd5be0 045c 4083 974a 37593a556c03 13884 0000074212610269

நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இடைநிலை வகுப்புகளுக்கு புதிய மாணவர்களை அனுமதிக்கும் முறைமையை மறுசீரமைப்புக்குட்படுத்தும் காரணத்தினாலேயே இந்தத் திடீர் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி மறு அறிவித்தல் வரும் வரையில் மாணவர்களை அனுமதிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கமைய தேசிய பாடசாலைகளில் முதலாம் வகுப்பு தவிர்ந்த மற்றைய வகுப்புகளுக்கு இடையில் புதிதாக மாணவர்களை சேர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.