ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான மஹேஸ் சேனநாயக இன்று மாலை நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பணிகளை ஆரம்பிக்கும் முதற்கட்ட நடவடிக்கையாக இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த மகேஸ் சேனநாயக்க இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது ஆதரவாளர்களைச் சந்தித்துத் தேர்தல் குறித்துக் கலந்துரையாடியதுடன், யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தியிருந்தார்.