ஐக்கிய தேசிய கட்சியினால் முடிந்தால் தன்னை இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி காட்டுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவை கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்த நிலையில் எதிர்காலத்தில் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.